அருள்மிகு ஆனந்த கணபதி துணையுடன் நடைபெற்ற கதிஜா பர்வீன் திருமணம்.!



முன்பெல்லாம் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் ஆண்களுடன் ஓடுவதும், பெற்றோர்களுக்கு தெரியாமல் கள்ள ரிஜிஸ்டர் ஆபீசான நாகூர் தர்கா போன்ற இடங்களுக்கு சென்று திருமணம் புரிவதும் என்ற அவலநிலையே இருந்தது. இதுபோன்ற செயல்கள் எல்லாம் நம் சமுதாய மக்களிடம் கேவலமாகவும், பெற்றோர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் காரியங்கலாகவும் பார்க்கப்பட்டு குறிப்பிட்ட அந்த குடும்பத்தின் மீது ஜமாத் நடவடிக்கை என்ற நிலையும் இருந்தது.
பின் இது உருமாறி, இஸ்லாமிய பெண்கள் அந்நிய மதத்தை சேர்ந்த ஆண்களுடன் தொலைபேசியில் கொஞ்சி குலாவுவதும், பள்ளி கல்லூரி செல்கின்றேன் என்று ஆட்டோ ஒட்டுனர்களிடமும், வேறு அந்நிய ஆண்களிடமும் பழக்கத்தை ஏற்படுத்தி, பின் பிடிபடுவதுமாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இந்த கள்ளக்காதல் முற்றி, இந்த தருதலைகள் காவல் நிலையங்கள் வரை சென்று, தஞ்சம் அடைந்து திருமணம் செய்துகொண்டு அது பத்திரிக்கைகளிலும் வார இதழ்களிலும் பிரசுரமாகி, நம் சமுதாயத்தினரின் மானத்தை தங்களின் பங்கிற்கு நாசமாக்கினார்கள்.
இது போன்ற அவலநிலைகள் எல்லாம் முற்றியதின் விளைவாக, நம் சமுதாய அமைப்புக்களும், மற்றும் சமுதாயத்தின் மேல் அக்கறை கொண்ட சகோதரர்களும் களப்பணியில் ஈடுபட்டு, நம் சமுதாயத்தில் புறையோடிப்போகியுள்ள வரதட்சனையின் விளைவுகளினாலே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற காரணம் என்று பிரச்சாரம் செய்து வரும் சூழ்நிலைகளில், பெற்றோர்களே தங்களின் பிள்ளைகளின் கள்ளத்தனமாக காதலுக்கு துணை போகின்ற போக்கும் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றது
இதன் விளைவுதான் தற்போது பெற்றோர்களே தங்களின் பெயர்களை, அந்நிய மதத்தை சேர்ந்த ஒருவருடன் தன் மகளுக்கு நடைபெறும் திருமண அழைப்பிதழ்களில் பகிரங்கமாக போட்டு விநியோகிக்கும் புதிய கலாசாரம் பரவி வருகின்றது!. இது சமுதாயத்திற்கும், நம் ஜமாத்திற்கும் விடப்படும் சவாலே அன்றி வேறு எதுவும் இல்லை..!. இதற்க்கு ஒரு முடிவு எட்டப்பட வேண்டும். இல்லை எனில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும்போது, பத்தோட இது ஒன்று என்று சர்வசாதாரணமாக இதுபோன்ற சம்பவங்கள் பிற்காலத்தில் நடைமுறைக்கு வந்துவிடும். நம் சமுதாய அமைப்புகளிடம் ஏற்பட்டுள்ள பிளவுகள் கூட இதுபோன்ற சம்பவங்கள் கண்டும் காணாமலும் விட்டுவிடப்படுகின்றது. வீரியமிக்க பிரச்சாரங்கள் குன்றி ஒரு இயக்கத்தை அடுத்த இயக்கம் குறை கூறி வருவதிலே தங்களின் நேரத்தையும், பொருளாதாரத்தையும் வீணாக்கி வருகின்றனர்.

என் அருமை சகோதர சகோதரிகளே..! நாம் ஒன்றும் அடுத்த மதத்தை சேர்ந்தவர்களைப்போன்று சர்வ சாதாரணமாக இதை விட்டுவிட்டு சென்றுவிட முடியாது. இன்று எங்கோ நடைபெற்ற இது போன்ற சம்பவங்கள் நாளை நமது ஊர்களிலும் நடைபெறலாம்!. இது ஒன்றும் சாபம் அல்ல.! மாறாக தொடர்கதையாகிப்போயுள்ள சம்பவத்தின் எச்சரிக்கை..!.

அல்லாஹ் நம்மை காப்பாற்ற வேண்டும்!. பெண் பிள்ளைகளை மார்க்க ஒழுங்கோடு பேணி வளர்க்காவிட்டால் அதன் விளைவுகள் பிற்காலங்களில் இது போன்றுதான் இருக்கும்!. பெண் பிள்ளைகள் மட்டும் வீணாகி வந்த காலம் போய், இன்று பெற்றோர்களும் அவர்களின் குடும்பத்தினரும் இதற்க்கு துணைபோகின்ற போக்கு நம் சமுதாயத்தின் மீது பாய்ச்சப்பட்டுள்ள விஷத்தாக்குதலாகும்
ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். போன்ற கும்பல்களால் நம் சமுதாய சகோதரிகள் குறிவைக்கப்படுவதும், அவர்களை ஏமாற்றி திருமணம் செய்து குழந்தை பெற்று அவர்களை நாசமாக்கி, பின் அவனின் நண்பர்களுக்கு இவளை விருந்து வைத்து சீரழித்து சின்னாபின்னமாக்கிவிட்டு அல்லது கொலைசெய்துவிட்டு செல்வதும் நடைபெற்றுள்ளது!. நம் சகோதரர்கள் இது போன்ற சம்பவங்களை மின்னஞ்சல்கள் அனுப்பி எச்சரிக்கை செய்தும் வருகின்றனர். ஆனால் முஸ்லிம் பெண்களின் கள்ளக்காதலுக்கு முன்னாள் இது போன்ற சம்பவங்கள் கண்ணை மறைத்து விடுகின்றது.

எனவே தங்களின் வீடுகளில் உள்ள பெண்பிள்ளைகளின் விசயத்தில் மிக எச்சரிக்கையாக இருங்கள். மிக கண்டிப்புடன் அவர்களை வளருங்கள். அவர்களின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணியுங்கள். தேவை என்றால் மட்டுமே அவர்களுக்கு மொபைல் போனை அனுமதியுங்கள். ஆனால் அவர்களுக்கு வரும் தொலைபேசியை கண்காணியுங்கள். முஹமத் நபியின் உம்மத்தில் வந்த நாம் நாளை நிச்சயமாக அல்லாஹ்விடம் மறுமைநாளில் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

With Love
Badr Zaman

Post a Comment

0 Comments