பருகும் பானத்தில் ஊதுவது பற்றி இஸ்லாம்


Top of Form
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே........

அபூஸயீத் அல்குத்ரீ(ரழி) அறிவிக்கின்றார்கள் :

பானத்தில் ஊதுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். "பத்திரத்தில் தூசி இருப்பதை நான் பார்க்கிறேன்" என்று ஒருவர் கூறினார். "அப்படியானால் அதனை(ச் சிறிதளவு) கீழே ஊற்றி விடுவீராக! (தூசிகள் நீங்கி விடும்) " என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் அம்மனிதர். "ஒரே மூச்சில் குடிப்பதால் நான் தாகம் தீர்க்கமுடிவதில்லை" என்று கூறினார். "உம் வாயிலிருந்து குவளையை எடுப்பீராக! (பின்னர் வெளியில் மூச்சு விட்டுவிட்டு, பிறகு தேவைப்பட்டால் குடிப்பீராக!)" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(திர்மிதீ : 1887. இது "ஹசன் ஸஹிஹ்" என்று திர்மிதீ இமாம் கூறுகிறார்கள்)


இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கின்றார்கள் :

நபி(ஸல்) அவர்கள் , பாத்திரத்தில் மூச்சு விடுவதையும், அதில் ஊதுவதையும் தடை செய்தார்கள்.

(திர்மிதீ : 1888. இது "ஹசன் ஸஹிஹ்" என இமாம் திர்மிதீ கூறுகிறார்கள்)

Bottom of Form


With Love
Badr Zaman

Post a Comment

0 Comments